வியாழன், நவம்பர் 25, 2010

உள்ளத்தைத் தொட்ட பொன்மொழிகள்

தொகுப்பு: 
சி.சத்தியசீலன், 
ஸ்ரொக்கோம், சுவீடன்

  • வலிமைமிக்க தன்னம்பிக்கைதான் பயத்தையும், தோல்வியையும், கவலையையும் வெற்றிகொள்ளும் சக்திவாய்ந்த சாதனம்.

  • மனச்சாட்சியின் குரலை மதித்து, நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் வகுத்துக் கொள்பவன் ஒருபோதும் தோல்வியடைவதில்லை.

  • தீர்மானத்திற்கு வருமுன் யோசி, ஆனால் தீர்மானத்திற்கு வந்தபின் காலம் தாழ்த்தாதே, செயலில் இறங்கு.

  • உல்லாசமாய்ப் பறக்கும் பறவையைப் பார்த்து அதைப்போல் மாற முயற்சிக்காதே, எல்லையற்ற தூரங்களுக்குத் துணிந்து செல்லும் அதன் தேடல் துணிவை மட்டும் அதனிடமிருந்து கற்றுக்கொண்டு உன்னோடு சேர்த்துக்கொள்.

  • எனக்குத் தேவையான அனைத்தையும் நான் பெறுவேன் என்று நம்புகிறவர்கள் மட்டுமே உறுதியாக வெற்றி பெறுகிறார்கள்.

  • முயற்சி செய்தால் நிச்சயம் நடக்கக்கூடிய சாத்தியம் எதுவோ, அதைப்பற்றி ஆழ்ந்து சிந்தியுங்கள். நீண்டகாலத்திட்டமாக உங்கள் இலட்சியத்தைப் பற்றிச் சிந்தியுங்கள். உங்கள் மனத்திற்கு முழுவதும் பிடித்த வேலைத்திட்டமாகவும் இருந்தால் நீங்கள் மிகப்பெரிய வெற்றியை எய்துவீர்கள்.

  • வாழ்க்கையின் வேகத்தைக் கண்டு முறிந்து போய் விடாதீர்கள். பிரச்சினைகளுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து முன்னேறுங்கள்.

  • அனைத்து வெற்றிகளுக்கும் அடிப்படையாக உள்ள ஒரே மந்திரச் சொல் "என்னால் வெற்றிபெற முடியும்" என்பதுதான்.

  • உண்மை ஒருபோதும் அழிவதில்லை. பொய் சிலகாலம் நிலைத்து நிற்கும்.

  • தர்மம் தரணி உள்ளவரை விரிந்து நிற்கும், அதர்மம் சொற்ப காலத்துக்குள் அழிந்துவிடும்.

2 கருத்துகள்:

Ravi Skjern Denmark சொன்னது…

Det är väldigt mycket trevligt dikt

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

நல்ல தொகுப்பு முடிந்தவரை அதை சொன்னவர்களின் பெயரையும் சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்!

கருத்துரையிடுக