ஞாயிறு, டிசம்பர் 26, 2010

மண்ணும் மரமும், மனிதனும் அத்தியாயம் 9

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன் 
என் செல்லக் கண்மணி 
இனி தமிழ் மக்கள் தாம் மண்ணையும், மரம், செடி கொடிகளையும், உயிரினங்களையும் ஆழ்ந்து நேசிப்பதைத் தமது மொழியில் எவ்வாறு அழகாக வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும் பார்ப்போம்.

அதற்கு முன்பாகக் காலத்தின் தேவை கருதி மேற்கத்தைய நாட்டவர்கள் குறிப்பாக ஐரோப்பியர்கள் நேசிக்கும் ஒரு மரத்தைப்பற்றி உங்களிடம் கூறியே ஆகவேண்டும். அந்த மரத்தைத் தமது பிள்ளைகளுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய மக்கள் மிகவும் நேசிக்கிறார்கள். எவ்வாறு தமது பிள்ளைகளை இனிய வார்த்தைகளால் அழைக்கிறார்களோ, அதே போலவே அம்மரத்தையும் " அன்பே, செல்லமே, இனிப்பே, கண்மணி, கண்ணே "   என்றெல்லாம் அழைக்கிறார்கள். அது என்ன மரம் என்ற கேள்வி மூளையைக் குடைகிறதா? சரி விடயத்திற்கு வருகிறேன். கிறிஸ்துமஸ்(நத்தார்) பண்டிகையை நேற்றைய தினம் கொண்டாடிய கோடிக்கணக்கான மேற்கத்திய நாட்டு மக்களின் வீடுகளில் காணப்படும் இந்தக் கிறிஸ்துமஸ் மரத்துக்குத்தான்(Evergreen Coniferous Tree) அத்தனை மதிப்பும், அன்பும், பாசமும் கிடைக்கிறது.


இவ்வாறு கிறீஸ்தவர்களின் தலைசிறந்த பண்டிகையாகிய நத்தாரில் இம்மரம் முக்கியத்துவம் பெறக் காரணம் என்ன? இந்த வழமை எப்போது, எங்கே ஆரம்பித்தது? போன்ற கேள்விகளுக்கு விடை தேடியபோது கிடைத்த தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இம்மரத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையில் அலங்கரித்து மகிழும் வழக்கம் 16 ஆம் நூற்றாண்டில் முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றான 'லித்துவேனியாவிலும்', ஜேர்மனியிலும் ஆரம்பித்தது என்று நம்பப்படுகிறது. தற்காலத்தில் இம்மரமானது மணிகள், எடை குறைந்த வர்ண உருண்டைகள், நகைகள், இனிப்புகள், மலர்கள், வண்ண அலங்காரங்கள், சிறிய தேவதைகளின் திரு உருவங்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப் படுகின்றது. இம்மரத்தின் உச்சியில் ஒரு உலோகத்தால்/ரப்பரால் ஆன ஒரு நட்சத்திரம் அல்லது ஒரு தேவதையின் உருவம் வைக்கப்படும். இது தேவ குமாரனாம் இயேசு பெத்லகேமில் பிறந்தபோது... 
(தொடரும்)

3 கருத்துகள்:

PALAN INDIA சொன்னது…

GOOD.

thavan denmark சொன்னது…

det e fint

Ravi Skjern Denmark சொன்னது…

tillykke med de halve år med hjemmesiden og godt nytår. i må have det godt i det nye år og fortsætte det gode arbejde.

hilsen Ravi mama

கருத்துரையிடுக