சனி, செப்டம்பர் 10, 2011

வல்லாரை


ஆக்கம்: கௌசி, ஜேர்மனி


வல்லாரை கண்டீரோஅதன் மகத்துவம் புரிந்தீரோ - மூளை
வல்லாரெல்லாம் சொல்லிச் சொல்லி உண்ணும்
வல்லமை யுணவு இவ்வல்லாரை தானன்றோ.



இயற்கையே எமக்குத் தகுந்த உணவுகளையும் மருந்து வகைகளையும்இலவசமாகத் தந்திருக்கின்றதுஅவற்றை நாம் தேடிப்பெற்றுஅநுபவிக்கத் தயங்கக் கூடாதுநீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும்முண்டரிகபரணிசரஸ்வதி ஆகுயோசனைவல்லி என்றேல்லாம் பெயர்பெறுகின்ற வல்லாரையை 
France  நாட்டினர் சூப்புச் செய்வதற்குப் பயன்படுத்துகின்றார்கள்.

சிறப்பு:
  • நரம்புகளுக்கு வலிமை தருகிறது.
  • தோல்நோய்களுக்கு மருந்தாக அமைகின்றது.
  • குடல் புண்ணை ஆற்றுகின்றது.
  • நீர்க்கடுப்புக்கு மருந்தாக அமைகின்றது.
  • கண் எரிச்சலைக் குணமாக்குகின்றது.
  • குஸ்டரோகம் ஆரம்பத்தில் சாற்றைப் பூச வேண்டும்அதன் முடிச்சுகளைஅகற்றக்கூடியது என Dr.Hunter கூறியிருக்கின்றார்.

 நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கின்றது
 இரத்தசுத்தி செய்யும் தன்மையுள்ளது.
 பல்லிலேயுள்ள மஞ்சள் நிறம் றைய 30, 40 நாள்கள் பச்சையாக எடுத்துத்தேய்த்தல் வேண்டும்.
 மனநோய்களுக்கு மருந்தாகவும் காணப்படும்



அதிகமாகச் சாப்பிட்டால்:
  • தலைச்சுற்று ஏற்படும்
  • மயக்கம் ஏற்படும்
  • உடம்பெல்லாம் வலியாக இருக்கும்.

இவ்வல்லாரையை வாரத்திற்கு இரண்டு முறை பாவித்தால்போதுமானது.
வல்லாரை இலை 150 கிராம் வசம்பு 15 கிராம் எடுத்து இவற்றைப்பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும்மந்தபுத்தி நீங்கும்.


உண்ணும் முறை:

1. வல்லாரைவெங்காயம்பச்சைமிளகாய்தேங்காய்ப்பூஉப்பு, எலுமிச்சம்புளி இவற்றை ஒன்றாக எடுத்து பச்சடி போல் அரைத்துச்சாப்பிடலாம்.

2. வல்லாரையை சிறிதுசிறிதாக அரிந்து அத்துடன் தக்காளிப் பழத்தையும்சிறுசிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு வெங்காயம்பச்சைமிளகாய்சிறிதுசிறிது துண்டுகளாக நறுக்கி அத்துடன் சேர்த்து உப்பு, எலுமிச்சம்புளி கலந்து உண்ணலாம்.

3. உறைப்பை விரும்பாதவர்கள் பச்சைமிளகாய் சேர்க்கத்தேவையில்லை.

3 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

பயனுள்ள தகவல்,,

பகிர்வுக்கு நன்றி..

T.Nathan, Denmark சொன்னது…

மிக பயனுள்ள தகவல். நன்றிகள்.

vinothiny pathmanathan dk சொன்னது…

நல்ல தகவல்கள் .நன்றி

கருத்துரையிடுக