வியாழன், ஜனவரி 12, 2012

பிரபலங்கள் - 6


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்

காந்தியம்


 காந்தியம் அகிம்சைத் தீவிரவாதம்.
சாந்தி தருமென எண்ணி
ஏந்தினார் மோகன்தாஸ் கரம்சந் காந்தி.
நீந்தினார் கடும் சத்தியசோதனையில்.
மன ஒழுக்கம் பேணியவர்
தினம் தூரதூரம் நடந்தவர்.
பெரும் தனமிவர் உலகிற்கே.

காந்தியம் வெந்தவன பூமியை
நந்தவனமாக்கும் பாதையென
சிந்திப்பார் உலகில் பலர்.
காந்தியைத் துரோகியென்போரும்
சந்தி சிரிக்கும் செயல்களாலும்
நொந்து கூசும் வன்முறைகளாலும்
விந்தை மனிதர்களாய் உலகிலின்று
பந்தாக உருட்டுகிறார் மனிதத்தை.

4 கருத்துகள்:

Palakkad Madhavan சொன்னது…

Short, but sweet. thanks.

Vijitha Kamal சொன்னது…

Romba super

Kumar சொன்னது…

Thanks Vetha

பெயரில்லா சொன்னது…

உங்கள் அனைவருக்கும் (கருத்துகளிற்கு ) மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

கருத்துரையிடுக