வெள்ளி, பிப்ரவரி 10, 2012

ஆன்மீகம் - 6

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்.
இறைவனை நினைக்க


(இசையோடு  பாட.. )
றைவனை நினைக்க இதயம் இளகும்.
சிறையெனும் வாழ்வின் குறைகள் மறையும்.
மறைகள் ஓதி மாண்புற வாழ்ந்தால்
நிறைவு பெருகும் நிம்மதி நிலவும்.  
   (இறை)

விடைகள் நோக்கா வேத முதல்வர்
சடையில் கங்கை சதுரத்தில் மங்கை.
படைகள் இன்றி பாதம் ஊன்றும்
குடையின் கீழே குடிகள் சிறக்கும்.
     ( இறை)

முக்கண் முதல்வன் முன்னின்றெமக்கு
தக்க கணத்தில் இடுக்கண் களைவான்.
தக்கன் மகளைத் தன் துணையாக
பக்கலில் ஆக்கிய அர்த்தநாரீசுவரன்.
    (இறை).

2 கருத்துகள்:

Kanthan, Denmark சொன்னது…

So good. I like to read this kind of stuff in friday. Have a great day. Thank you, Vedha.

vetha (kovaikkavi) சொன்னது…

Thank you so much. May God bless you

கருத்துரையிடுக