வெள்ளி, மார்ச் 30, 2012

ஆன்மீகம் - 8


தஞ்சைப் பெரிய கோயில்…..

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்


நெஞ்சை உயர்த்தி நிற்கும்
விஞ்சும் இந்தியப் பெருமை
தஞ்சைப் பெரிய கோவில்.
இராஐராஐனின் உருவாக்கம்.
கட்டிடக் கலையின், தொழில்
நுட்ப அறிவின் வியப்பு!…..
அடுக்கடுக்காகப் பாறைகள் சேர்த்து
அடுக்கிய உருவகம் கோயிலாம்.
யிரத்து நான்கில் ஆரம்பம்.
ஆயிரத்துப்பத்து வரை கட்டிய
ஆறுவருட அளப்பரிய சாதனை.
கட்டுமானத் தலைமைப் பொறியியலாளராய்
கட்டியவர் குஞ்சரமல்லராம்.
தெய்வபக்தியுடை மனிதசக்திகளால்
செய்திட்ட தமிழின் உன்னதம்.
சோழப் பேரரசின் முத்திரை.
மூன்றடி உயர லிங்கபீடம்
ஐம்பத்தைந்து அடி சுற்றளவாம்.
ஆறு அடி கோமுகத்துடன்
ஒரே கல்லில் உருவாக்கியதாம்(?)
இருநூற்றிப்பதினாறடி உயர
கோயில் விமானமாம். ஆயிரம்
வருட இந்திய ஓவியங்களின்
சேகரிப்புக் குவியல்கள் உள்ளேயாம்.
ந்தியாவின் நெற்றிப்பட்டமாக இது
குந்தியிருப்பதிது தஞ்சாவூரில்.
இரண்டாயிரத்தப் பத்தாம் வருடம்
ஆயிரமாம் பிறந்தநாள் நிறைவு.
பிரகதீஸ்வலர் ஆலயம் என்பர்.
உலக மரபுச் சின்னமென்பது
யுனெஸ்கோவின் அங்கீகாரமாம்.
தஞ்சைப்பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே!

1 கருத்து:

வேணுகோபால், தஞ்சாவூர். சொன்னது…

அருமை அருமை...

கருத்துரையிடுக