ஞாயிறு, பிப்ரவரி 16, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்
 
 
அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் 
பெற்றாள் தமியள்மூத் தற்று. (1007)

பொருள்: வறியவர்க்கு ஒன்றும் கொடுத்து உதவாதவனுடைய செல்வம் மிக்க அழகும், ஆரோக்கியமும் உள்ள ஒருத்தி மணம் செய்து கொடுப்பவரில்லாமையால் கணவன் இன்றித் தனியளாய் முதுமையுற்றது போலப் பலனின்றி அழியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக